Published : 12 Feb 2016 11:03 AM
Last Updated : 12 Feb 2016 11:03 AM
இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரிந்தர் சித்து நியமிக்கப் படுவார் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
சித்துவின் குடும்பம் அவர் குழந்தையாக இருந்தபோது, சிங்கப்பூரிலிருந்து, ஆஸ்திரேலி யாவுக்கு குடிபெயர்ந்தது.
வெளியுறவு விவகாரங்கள் மற்றும் வர்த்தக துறையில் முது நிலை அதிகாரியாக சித்து பணி புரிந்துள்ளார். இதுதவிர, பல்துறைக் கொள்கைப் பிரிவில் முதல் உதவிச் செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.
மாஸ்கோ, டமாஸ்கஸ் உள்ளிட்ட நாடுகளில் இதற்கு முன்பு பணிபுரிந் துள்ளார். தற்போதைய தூதர் பாட்ரிக் சக்லிங் ஓய்வுபெறுவதை யொட்டி, அடுத்த தூதராக ஹரிந்தர் சித்து அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்திய வம்சாவளிப் பெண் ணான ஹரிந்தர் சித்து, சிட்னி பல் கலைக்கழகத்தில், சட்டம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT