Published : 16 Feb 2016 10:51 AM
Last Updated : 16 Feb 2016 10:51 AM

ஹெலிகாப்டர் தரையில் மோதி 3 வீரர்கள் பலி

தென்கொரிய ராணுவ ஹெலிகாப்டர் தரையில் மோதி நொறுங் கியது. இதில் 3 வீரர்கள் பலியாகினர்.

தென்கொரியாவின் காங்வான் மாகாணம் சூன்சென் பகுதியில் நேற்று ராணுவ ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த ஹெலிகாப்டர் வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது.

ஹெலிகாப்டரில் இருந்த 4 வீரர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். மற்றொருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வடகொரியா, தென் கொரியாவுக்கு இடையே மோதல் முற்றி வரும் நிலையில் ஹெலி காப்டர் தரையில் மோதி விபத்துக் குள்ளாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் சதிச் செயல் இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x