Published : 12 Feb 2016 11:12 AM
Last Updated : 12 Feb 2016 11:12 AM
இலங்கை நாடாளுமன்ற நியமன எம்.பி.யாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா பதவி யேற்றுள்ளார். இதற்கு மனித உரிமை கண்காணிப்பகம் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் ஆசிய பிராந்திய தலைவர் பிரட் ஆடம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சரத் பொன்சேகா தலைமை யிலான ராணுவ வீரர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் எம்.பியாக பதவியேற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது நம்பிக்கை துரோகம். அரசின் நடவடிக்கை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் ஜன நாயக கட்சி சில நாட்களுக்கு முன்பு ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு எம்.பி. பதவி வழங்கப்பட் டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT