Published : 11 Jun 2021 01:42 PM
Last Updated : 11 Jun 2021 01:42 PM

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு முகக்கவசம் தேவையில்லை: பிரேசில் முடிவு

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று பிரேசில் விரைவில் அறிவிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து பிரேசில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும், கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களும் பொதுவெளியில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்து பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் விரைவில் ஆலோசித்து வெளியிட உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களுக்கும் முகக்கவசம் அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா, முகக்கவசம், தனிமைப்படுத்துதல் தேவையில்லாத ஒன்று என்று பகிரங்கமாகத் தெரிவித்தார். இதன் காரணமாக மருத்துவ நிபுணர்களால் போல்சனோரா கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

பிரேசிலில் இதுவரை 1.7 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும். கரோனாவுக்கு 4,80,000 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் இதுவரை 24% பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x