Last Updated : 22 Dec, 2015 10:10 AM

 

Published : 22 Dec 2015 10:10 AM
Last Updated : 22 Dec 2015 10:10 AM

பிரமிக்க வைக்கும் ஆஸ்திரேலியா - 19

'அனைவரும் சமம்' என்ற சட்ட சீர்திருத்தத்தை சுமார் 40 வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா கொண்டு வந்தது. தவிர சுரங்கங்களை விட்டுக் கொடுத்த அபாரிஜின் களுக்கு மானியத் தொகை வழங்க வேண்டுமென்றும் முடிவெடுக் கப்பட்டது. இருந்தாலும் இதெல் லாம் அபாரிஜின்களின் முன்னேற்றத்துக்குப் பெரிதாக உதவவில்லை.

அரசை எதிர்த்துப் போராடுவதற் காக தங்களுக்கென ஓர் இயக்கத்தையும் தனிக்கொடி யையும் அவர்கள் உருவாக்கிக் கொண்டனர். முழு சுதந்திரம் கிடைக்கப் போராடத் துவங்கினர். வேலைவாய்ப்பு அந்த நாட்டில் கொட்டிக் கிடந்தாலும் கல்விக் கான வாய்ப்பைச் சரியாகப் பயன் படுத்திக் கொள்ள முடியாமையால் அபாரிஜின்களில் பலரும் வேலையில்லாத் திண்டாட்டத்தில் உள்ளனர். மிக அதிகமான போலீஸ் வழக்குகள் இவர்கள் மீது பதிவாகின்றன. முக்கியமாக குடி மற்றும் போதை மருந்து தொடர்பான குற்றங்களுக்காக.

தவிர, உலகிலேயே வெளிநாட்டு மாணவர்களை இழந்து வரும் நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா உள்ளது.

அதற்கு ஆஸ்திரேலியாவில் ஆங்காங்கே காணப்படும் இன வெறி முக்கியமாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் குவின்ஸ் லாண்ட் மாகாணத்தில் இந்தியர் ஒருவர் உணவகம் நடத்தி வருகிறார். இதுகுறித்து சில ஆஸ்திரேலிய இளைஞர்கள் அடிக்கடி விமர்சனம் செய்துள்ளனர். ஒரு சமயம் உணவகம் நடத்தும் இந்தியரையும் அவரது குழந்தைகளையும் இனவெறியுடன் விமர்சனம் செய்ய, அவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அந்த இந்தியக் குடும்பத்தினர் மீது எச்சில் துப்பி அநாகரிகமாக நடந்து கொண்டிருக்கின்றனர் அவர்கள்.

சில வருடங்களுக்கு முன் புத்தாண்டு தினத்தன்று இரண்டு இந்தியர்கள் தாக்கப்பட்டனர். ஒருவர் கொலை செய்யப்பட்டார். மெல்போர்னில் இந்தியர் ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

எதனால் இந்தியர்கள் தாக்கப் படுகிறார்கள்? இவை தனித்தனிச் சம்பவங்கள். இனவெறிதான் அடிப்படை என்று கூற முடியாது என்கிறது ஆஸ்திரேலிய அரசு. ஆனால் இது தொடர்பாக ஆழமான விசாரணை எதையும் அந்த நாட்டு அரசு எடுத்ததாகத் தெரியவில்லை.

சொல்லப்போனால் ‘‘இந்தியர் ஆஸ்திரேலியாவில் உயிரோடு கொளுத்தப்பட்டார்’’ என்ற வகைச் செய்திகள் அவ்வப்போது இடம் பெறுகின்றன. உலகிலேயே இனவெறி மிகுந்த நகரம் மெல்போர்ன் என்று சிலர் குறிப்பிடத் தொடங்கினார்கள்.

சுமார் 70,000 இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் படிக்கிறார்கள். (இந்த எண்ணிக்கை சமீபத்தில் குறைந்திருக்கிறது).

இன்னமும்கூட ஆஸ்திரேலி யாவில் மண்ணின் மைந்தர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகத் தான் நடத்தப்படுகிறார்கள் என்ற குறை அவர்களுக்கு உண்டு. அது உண்மையும்கூட. இதற்கு சமீபத்திய உதாரணம் ஜாக் சார்லஸ் என்ற நடிகருக்கு ஏற்பட்ட அனுபவம்.

ஜாக் சார்லஸ் அபாரிஜின் இனத்தைச் சேர்ந்தவர். நடிகர், இசைக் கலைஞர் என்று பன்முகம் கொண்டவர்.

ஆஸ்திரேலியாவில் ஒரு நாடக அமைப்பை உருவாக்கினார். இது முழுக்க முழுக்க உள்ளூர் தன்மை யைக் கொண்டதாக உருவாக்கப் பட்டது (அதாவது ஆங்கிலேய-அமெரிக்க வாடையில்லாமல்). அவர் குழுவின் முதல் நாடகத்தின் பெயர் ‘ஜாக் சார்லஸ் வீழ்ச்சிக்காக எழுந்து போராடுகிறார்’’ (Jock Charless is up and fighting).

பாரதி போன்று மாறுவேடமிட வேண்டும் என்ற போட்டியில் நிஜமான பாரதியும் கலந்து கொண்டபோது அவருக்கு முதல் பரிசு கிடைக்கவில்லை என்பார்கள். அதுபோல 1972-ல் போனி என்ற தொலைக்காட்சித் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணின் மைந்தனான கதாநாயக பாத்திரத்துக்கு இவர் விண்ணப் பித்தபோது, தேர்வுக்குக் கூப்பிடப் பட்டு அவரை நிராகரித்தார்கள். ‘‘நீல நிறம் கொண்ட கண்கள் அமைந்தவராக இருப்பவரைத்தான் நாங்கள் தேடுகிறோம்’’ என்றனர். பிறகு நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த வாய்ப்பு சென்றது.

கணிசமான திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் ‘The chant of Jimmy Blacksmith’ என்ற திரைப்படம் இவருக்குத் தனி இடத்தைப் பெற்றுத் தந்தது. பலவித கொடுமைகளுக்கும் அலைக் கழிப்புகளுக்கும் உள்ளாகும் ஓர் அபாரிஜின் பொங்கி எழுவதுதான் இதன் கதை. இது புத்தகமாக வெளிவந்தபோது புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஜாக் சார்லஸுக்கு (அதில் துணைப் பாத்திரத்தில்தான் நடித்திருந்தார் என்றாலும்) பெயர் வாங்கிக் கொடுத்த படம் இது.

சமீபத்தில் இரண்டுமுறை டாக்ஸி டிரைவர்கள் தன்னை ஏற்றிக் கொள்ள மறுத்ததாக அவர் கூறியது ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானது. மெல்போர்னில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். ஆண்டின் ‘சிறந்த விக்டோரிய சீனியர் ஆஸ்திரேலியர்’ என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்குப் பிறகு ஒரு டாக்ஸியில் அவர் ஏற முயன்றபோது பயணத்துக்கான கட்டணத்தை முதலிலேயே கொடுத்துவிட வேண்டும் என்றார் ஓட்டுநர். இறங்கிய பிறகு நீங்கள் பணம் கொடுக்காமலும் போகலாம் என்று தனக்குத் தோன்றுவதாகவும் கூறினார் அந்த ஓட்டுநர். ஜாக் சார்லஸ் மறுத்தார். அவரை ஏற்றிக் கொள்ள ஓட்டுநர் மறுத்துவிட்டார்.

அவர் தொடர்பான இரண்டாவது நிகழ்ச்சியும் மெல்போர்னில்தான் நடந்தது.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x