Published : 09 Dec 2015 07:00 PM
Last Updated : 09 Dec 2015 07:00 PM
அமெரிக்காவில் ஆண்டுதோறும் வழங்கப்படும் எச்-1பி விசா உச்சவரம்பை குறைக்க வலியுறுத்தி புதிய சட்ட மசோதாவை அந்நாட்டு செனட் சபையில் 2 உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ளனர்.
அதாவது 15,000 எச்1பி விசாக்களைக் குறைக்க செனட் சபையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயகக் கட்சி உறுப்பினர் பில் நெல்சன் மற்றும் குடியரசு கட்சியின் ஜெப் செஷன்ஸ் ஆகிய இருவரும்தான் இந்த மசோதாவை செனட் சபையில் அறிமுகம் செய்துள்ளனர்.
இதுகுறித்து நெல்சன் கூறும்போது, “ஆண்டுதோறும் வழங்கப்படும் எச்-1பி விசா உச்சவரம்பை குறைப்பதன் மூலம், முதலில் மிக அதிக சம்பளம் பெறும் வெளிநாட்டினருக்கு இந்த விசா கிடைக்க முன்னுரிமை வழங்கப்படும். அதேநேரம், அவுட்சோர்சிங் நிறுவனங்கள், அமெரிக்க ஊழியர்களுக்கு பதிலாக அவர்களுக்கு இணையான தகுதி உடைய வெளிநாட்டு ஊழியர்களை குறைவான ஊதியத்தில் பணியமர்த்துவதைத் தடுக்க உதவும்” என்றார்.
இப்போது ஆண்டுதோறும் அதிகபட்சமாக 85 ஆயிரம் எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இதில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களில் உயர் கல்வியை முடித்த 20 ஆயிரம் வெளிநாட்டினருக்கு இந்த வகை விசா வழங்கப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாக இந்த எச்-1பி விசாவின் பெரும்பகுதி இந்திய மென்பொருள் பொறியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த புதிய மசோதா சட்டமானால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT