Published : 22 Apr 2021 01:23 PM
Last Updated : 22 Apr 2021 01:23 PM
பிரான்ஸில் கரோனா தொற்று குறைந்துள்ளதன் காரணமாக மே மாதம் முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 43,098 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 375 பேர் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பு ஒரே மாதத்தில் 20,000 வரை பிரான்ஸில் குறைந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு அரசு மே மாதம் முதல் பல்வேறு தளர்வுகளை அறிவிக்க உள்ளது. இதில் பயணத் தளர்வுகளும் அடங்கும்.
முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்ட பிரான்ஸ் அதிபர் மக்ரோன், ஊரடங்கு அறிவிக்கப்படாது என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை மட்டுமே பிரான்ஸ் அரசு அறிவித்து வந்தது. இந்த நிலையில் கரோனா தொற்று குறைந்துள்ளதைத் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மேலும், மே மாதத்துக்குள் 2 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. பிரான்ஸில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானவர்களுக்குத் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT