Published : 08 Nov 2015 11:23 AM
Last Updated : 08 Nov 2015 11:23 AM
தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று 6.8 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி பாதிப்பு ஏதுமில்லை.
சிலியின் மத்திய காக்கிம்போ பகுதியை, 36 கி.மீ. ஆழத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.31 மணிக்கு நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியி யல் ஆய்வு மையம் தெரிவிக் கிறது. ஆனால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை.
சிலியின் தலைநகர் சான்டியா கோவில் இருந்து வடக்கே சுமார் 300 கி.மீ. தொலைவிலும் ஓவலே நகரில் இருந்து 47 கி.மீ. தொலைவில் கடற்கரைக்கு அருகிலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி காணப்பட்டது.
நிலநடுக்கமும், எரிமலை சீற்றமும் சிலியில் அடிக்கடி ஏற்படுகிறது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் 8.3 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கமும் இதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில் 15 பேர் இறந்தனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT