Published : 28 Nov 2015 09:25 AM
Last Updated : 28 Nov 2015 09:25 AM
சிரிய அகதிகளுக்கு உதவுவதற் காக ஐக்கிய நாடுகள் சபையிடம் 7.5 கோடி அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.500 கோடி) கனடா நிதியுதவியாக அளித்துள்ளது.
சிரிய அகதிகளுக்கு உதவுவ தாக, அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தற்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியாவு உறுதி அளித்திருந்தார். அதை நிறைவேற்றும் வகையில் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான சிரிய அகதி களை மறு குடியமர்வு செய் வதன் ஒரு பகுதியாக இந்த நிதி அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT