Published : 21 Nov 2015 10:04 AM
Last Updated : 21 Nov 2015 10:04 AM

அடாவடி பின்னணி கொண்ட ஆஸ்திரேலியா - 8

கடந்த 1856-ம் ஆண்டு உலகத் தொழிலாளர்களுக்கு ஆஸ்திரேலியா ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்த ஆண்டு.

அதற்கு முன்பெல்லாம் ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழி லாளர்கள் தினமும் மிக அதிகமான நேரத்துக்கு (சுமார் 12 மணி நேரம்) வேலை வாங்கப்பட்டனர். இதற்கெதிராக அவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்கள் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று கோஷமிட்டபடி நாடாளுமன்றத்துக்கு ஊர்வல மாகச் சென்றனர். இதைத் தொடர்ந்து பொதுப் பணியில் ஈடுபடும் கட்டிடத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் வேலை செய்தால் போதும் என்றும் பழைய ஊதியமே அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு சட்டம் முதலில் இயற்றப்பட்டது ஆஸ்திரேலியாவில்தான்.

ஆனால் அதே ஆண்டு நம்மில் பலராலும் ஏற்க முடியாத ஒரு ஏற்பாடும் அரங்கேறியது. அந்தந்த மாநிலத்தின் ஆளுநர்களும் பிரதி நிதிகளும் இனி மக்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முடிவானது. நல்ல விஷயம்தானே என்பீர்கள். மூன்று அதிகப்படித் தகவல்கள். ஒன்று, ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை, இரண்டு அவர்கள் வெள்ளையர்களாக இருக்க வேண்டும். மூன்று அவர் களுக்குச் சொந்த வீடு இருக்க வேண்டும் அல்லது கணிசமான வாடகை தந்து அவர்கள் பிறர் வீட்டில் குடியிருக்க வேண்டும்.

விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியா ஆகியவை சுயாட்சி அந்தஸ்து பெற்றன. எனினும் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு ஆகியவை பிரிட்டன் வசம்தான்.விரைவிலேயே நியூ சவுத் வேல்ஸிலிருந்து குவின்ஸ்லாந்து பகுதி பிரிந்தது.

1880-கள் பொதுவாக ஆஸ்தி ரேலியாவுக்கு நன்மையாகவே அமைந்த வருடங்கள் எனலாம். இந்த காலகட்டத்தில் தங்கச் சுரங்கங்களால் பலனடைந்தவர் களில் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி திருமணம் செய்து கொண்டு தங்களுக்கென புறநகர் பகுதிகளில் வீடுகளை வாங்கத் தொடங்கினர். இதன் காரணமாக ரியல் எஸ்டேட் வணிகம் மிக அதிகமாக வளரத் தொடங்கியது - முக்கியமாக மெல்போர்னில்.

உலகிலேயே ஆஸ்திரேலியத் தொழிலாளிகள்தான் அதிஷ்ட மானவர்கள் என்று குறிப்புகளை எழுதிவிட்டுப் போயிருக்கிறார்கள் அந்தக்கால எழுத்தாளர்கள். நல்ல உணவு, சிறந்த உடை, சொந்த வீடு என்றெல்லாம் அவர்களில் பலரும் நிறைவாகவே வாழ்ந்தார் களாம்.

ஆனால் புறநகர் பகுதிகளில் எல்லாம் வீடுகள் கட்டிக் கொள்வது மிகவும் அதிகரித்தபின் பழங்குடி மக்கள் மேலும் மேலும் தாங்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து துரத்தப் பட்டார்கள். கூடவே அவர் களுக்கு ஆதரவாக பிரிட்டன் இருப் பதுபோல் பசப்பு வார்த்தைகள் மட்டும் வலம் வந்தன. கண்துடைப்பு நாடகம் அரங்கேறியது.

1883-ல் அரசியல்வாதியும் முதலீட்டாளருமான அலெக் ஸாண்டர் ஃபாரஸ்ட் என்பவர் வடமேற்கு ஆஸ்திரேலியாவில் அமைந்த கிம்பர்லி என்ற ஒரு பகுதியின் நில முகவராக தன்னை காட்டிக் கொண்டார். இந்தப் பகுதி மிகப்பெரியது. இங்கிலாந்தை போல கிட்டத்தட்ட மூன்று மடங்கு பரப்பளவு கொண்டது. 2,10,00,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியை ஆஸ்திரேலியர்களுக்கு குத்தகைக்கு விட்டார். பின்னாளில் அபாரிஜின்கள் ஆயுதம் தாங்கி தங்கள் எதிர்ப்பைக் காட்டியதற்கு இதுவும் ஒரு வலுவான காரணமாக அமைந்தது.

1887-ல் ஹென்றி லாசன் என்பவர் ‘குடியரசின் கீதம்’ என்ற பாடலை இயற்றினார். இதை ஆஸ்திரேலியாவின் தேசிய கீதமாக எடுத்துக் கொள்ளலாமா அல்லது ஏற்கனவே பிரிட்டிஷ் மகாராணியின் புகழ் பாடும் தேசிய கீதத்தை தொடரலாமா என்பது குறித்து விவாதங்கள் நடைபெறத் தொடங்கின.

1899-ல் தென்ஆப்பிரிக்காவில் போயர் போர் (The Boer War) தொடங்கியது. பிரிட்டிஷ் சாம்ராஜ் யத்தின் சார்பாகப் போரிட ஆஸ்தி ரேலிய ராணுவ வீரர்களும் அனுப் பப்பட்டனர். இவர்கள் (முக்கிய மாக) குதிரைப் படைவீரர்கள். பிரிட்டிஷ் ராணுவத்தினரைவிட போர் கலையில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று பரவலாகக் கருதப்பட்டது. இப்படி அனுப் பப்பட்ட 12,000 ஆஸ்திரேலியர் களில் சுமார் 600 பேர் போரிலும் நோய்வாய்பட்டும் இறந்தனர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. லண்டனில் ஆஸ்திரேலி யாவுக்கான அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் மேற்கு ஆஸ்திரேலியாவில் இதை ஏற்றுக் கொள்வது குறித்து கருத்துக் கணிப்பு கேட்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிரிட்டன் இதை மிகக் கடுமையாக எதிர்த்தது.

பதிலுக்கு ‘‘பொதுவான அரசியல மைப்புச் சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் இந்த கண்டத்தின் பிற பகுதிகளோடு எங்களை இணைக்கும் ரயில் பாதைகளுக்கான செலவுகளை எங்கள் தலையில் கட்டக்கூடாது’’ என்றது மேற்கு ஆஸ்திரேலியா. இதற்கு பிரிட்டன் சம்மதித்தது.

புதிய தலைநகர் ஆஸ்திரேலி யாவுக்குத் தேவை என்று கருதப்பட்டது. அது எது என்பதில் கடும் குழப்பங்கள் ஏற்பட்டன.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x