Published : 07 Feb 2021 02:29 PM
Last Updated : 07 Feb 2021 02:29 PM

பிரான்ஸில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 20,586 பேருக்கு பாதிப்பு

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 20,586 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் தொடர்ந்து கரோனா அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவமனைகளில் சேர்கை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத் துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் பிரான்ஸில் 20,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33 லட்சமாக உள்ளது.

கடந்த சில நாட்களாக பிரான்ஸில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகிலேயே கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸும் உள்ளது.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x