Published : 20 Oct 2015 10:51 AM
Last Updated : 20 Oct 2015 10:51 AM
அமெரிக்காவுடன் நல்ல உறவுமுறையுடன் இருக்க விரும்புகிறோம்’’ என்று சமீபத்தில் அதிபர் மொரேல்ஸ் கூறியிருக்கிறார்.
“மீண்டும்
அதென்ன ‘மீண்டும்’?
ஒருவிதத்தில் அமெரிக்காவுக் கும், பொலிவியாவுக்குமான உறவு 1837-ல் தோன்றியது எனலாம். அப்போது பெரு-பொலிவிய கூட்ட மைப்பு உருவானது. அதற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு தூதர் அனுப்பப்பட்டார். என்றாலும்கூட இந்த இரு நாடுகளுக்கிடையே நேரடியான தூதரக உறவு ஏற்பட்டுவிடவில்லை.
1848ல் அதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. அந்த ஆண்டில் தான் பொலிவியாவை ஒரு தனி சுதந்திர நாடு என்று அமெரிக்கா அங்கீகரித்தது. கூடவே ஜான் ஆப்பிள்டன் என்பவரை பொலிவி யாவுக்கான பிரதிநிதியாக அமெரிக்கா அறிவித்தது.
ஆனால் காலப்போக்கில் பொலிவியாவின் அதிபரான ஈவோ மொரேல்ஸ் அமெரிக்கக் கொள்கை களை அடிக்கடி விமர்சித்தார். வெனிசுவேலா, ஈரான் ஆகிய நாடு களின் தீவிர ஆதரவாளராக அவர் விளங்கியதுகூட இதற்கு ஒரு காரணம்.
அதிபர் ஆவதற்கு முன்பாகவே அமெரிக்காவின் பகைமையை சம்பாதித்துக் கொண்டவர் மொரேல்ஸ். எனவே 2006-ல் அவர் அதிபரான போது பொலிவிய-அமெரிக்க உறவில் மேலும் கசப்புகள் தோன்றின.
“போதைப் பொருள்களை தயாரித்தல் மற்றும் கடத்தலைக் கட்டுப்படுத்தும் செயல்முறை களில் பொலிவியா பெரும் தோல்வி அடைந்துவிட்டது. என் றாலும் பொலிவியாவுக்கு அளிக் கும் நிதி உதவியை நாங்கள் தொடருவோம்’’ என்று பெருந் தன்மை போல கொஞ்சம் குத்தலாக விமர்சித்தது அமெரிக்கத் தரப்பு.
மொரேல்ஸ் இதற்கு சில நாட்களில் பதில் அளித்தார். தன் னுடைய நாட்டின் முன்னேற்றக் கொள்கைகளை அமெரிக்கா தகர்க்க நினைக்கிறது என்றார். நாட்டின் பல பகுதிகளில் சுயாட்சி என்ற பெயரில் தனக்கு எதிர்ப்பு கள் கிளம்பி உள்ளதற்கு அமெரிக் கப் பின்னணியும் காரணம் என்றார். அமெரிக்கத் தூதரே தன்னைப் பற்றித் தவறாக (போதைப் பொருள் கடத்தலுக்குத் துணையாக இருப் பவர் என்பதுபோல) விமர்சித்த தைக் குறிப்பிட்டார். பொலிவிய மக்கள் மொரேல்ஸுக்கு ஆதர வாக வாக்களித்தால் அமெரிக்க நிதி உதவி நிறுத்திக் கொள்ளப் படும் என்றும் அவர் கூறியதை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அதுமட்டுமல்ல முந்தைய ஆட்சியின்போது புரட்சியாளர் களுக்கு ரகசியமாக அமெரிக்க ராணுவம் உதவி செய்தது என் பதையும் குறிப்பிட்டார். பொலிவி யாவில் உள்ள பின்லேடன் என்றும் அமெரிக்கத் தூதர் தன்னை வர்ணித்தார் என்றார்.
இவற்றின் உச்சமாக நவம்பர் 2010-ல் மொரேல்ஸ் ஓர் அறிக் கையை வெளியிட்டார். பொலிவியா, வெனிசுவேலா, ஈக் வேடார் போன்ற மூன்று நாடு களின் ஆட்சிகளையும் கவிழ்ப்பதற் கான வேலையில் அமெரிக்கா இறங்கியுள்ளது என்றார். பொலிவி யாவின் வெளியுறவுக் கொள்கை களை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது என்று காட்டத்துடன் கூறினார். அப்போது பொலிவியா வுக்கும், ஈரானுக்கிமிடையே பேச்சு வார்த்தைகள் நடக்கத் தொடங்கி யிருந்தன.
ஜூலை 2013-ல் நடைபெற்ற ஒரு சம்பவம் பொலிவிய- அமெரிக்க உறவை மேலும் சீர்குலைத்தது. ரஷ்யாவுக்குச் சென்ற மொரேல்ஸ் பொலிவியாவுக்குத் திரும்பும்போது ஓர் எதிர்பாராத சிக்கல் உண்டானது. பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி ஆகிய நாடுகள் அப்போது ஓர் அறிவிப்பை வெளியிட்டன. ‘’ மொரேல்ஸ் பயணம் செய்த விமானம் தங்கள் எல்லைக்குள் இறங்கக் கூடாது’’.
ஏன் இந்த அறிவிப்பு? வதந்தி கள் கொடிகட்டிப் பறந்தன. அவற் றில் முக்கியமானது அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் அந்த விமானத்தில் இருக்கிறார் என்று கருதப்பட்டதுதான். அமெரிக்க அரசு ஸ்னோடெனைக் கடும் எதிரி யாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
“எங்களுக்கு அமெரிக்கத் தூதரகம் தேவை யில்லை. அதற்கு மூடுவிழா நடத் தப்படும்’’.
எனவே ஆஸ்திரியாவின் தலை நகர் வியன்னாவில் இறங்கியது மொரேல்ஸ் வந்த விமானம். அவர் நேரடியாக பொலிவியா திரும்ப வேண்டும் என்றால்கூட ஐரோப்பிய நாடு ஒன்றில் இறங்கிவிட்டுதான் பயணத்தைத் தொடர வேண்டி யிருக்கும் (எரிபொருள் நிரப்ப). எனவே தன்னை தன் தாய்நாட் டுக்குத் திரும்ப விடாமல் செய்கிறது அமெரிக்கா என்று கோபப்பட்டார் மொரேல்ஸ். ஐரோப்பிய நாடுகள் தன் விமானத்தை இறக்க தடை விதித்ததற்குக் காரணம் அமெரிக்கா கொடுத்த அழுத்தம் தான் என்பது மொரேல்ஸின் உறுதி யான முடிவாக இருந்தது. ஒரு வழியாக பொலிவியா திரும்பிய வுடன் மொரேல்ஸ் திட்டவட்டமா கத் தெரிவித்தார்
(உலகம் உருளும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT