Published : 10 Jan 2021 01:55 PM
Last Updated : 10 Jan 2021 01:55 PM

ஜெர்மனியில் கரோனா பலி 40,000-ஐக் கடந்தது

ஜெர்மனியில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 40,000-ஐக் கடந்துள்ளது.

இதுகுறித்து ஜெர்மனியின் ராபர்ட் கோச் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24,694 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தைக் கடந்துள்ளது. நேற்று மட்டும் 1,083 பேர் பலியாயினர். இதனால் பலி எண்ணிக்கை 40,000-ஐக் கடந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பைசர் கரோனா தடுப்பு மருந்து கரோனா தொற்றுக்கு எதிராகச் சிறப்பாகச் செயலாற்றுவதாக ஜெர்மனி தெரிவித்துள்ளனது.

பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்தில் கரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. அதில் ஜெர்மனியும் ஒன்று. கரோனா பரவலின் தீவிரம் அதிகமாக உள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8.5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x