Published : 19 Dec 2020 12:14 PM
Last Updated : 19 Dec 2020 12:14 PM

பைசர் கரோனா தடுப்பு மருந்தால் அலர்ஜி: அமெரிக்கா

பைசர் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு சில அலர்ஜி அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க மருத்துவத் துறை இயக்குனர் மார்க் கூறும்போது, “அலஸ்கா உள்ளிட்ட மாகாணங்களில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட சிலருக்கு அலர்ஜி அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதேபோன்று பிரிட்டனிலும் சிலருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அலர்ஜி உள்ளவர்களுக்கே மீண்டும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நலமாக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அலர்ஜி உள்ளவர்கள் பைசர் கரோனா தடுப்பு மருந்தைத் தவிர்க்கலாம் என்றும் அமெரிக்க மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர்தான் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்துக்கு அமெரிக்காவில் அனுமதி அளிக்கப்பட்டது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் ஃபெடெக்ஸ் மற்றும் யுபிஎஸ் நிறுவனங்கள் மூலம், நாட்டிலுள்ள ஒவ்வொரு மாகாணத்துக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பும் முயற்சியைத் தொடங்கியுள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி நியூயார்க் நகரில் அமைந்துள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய செவிலியருக்கு முதன்முதலாகக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x