Published : 11 Dec 2020 07:29 AM
Last Updated : 11 Dec 2020 07:29 AM
கூகுள் நிறுவனத்தில் செயற்கைநுண்ணறிவு (ஏஐ) ஆராய்ச்சியாளராக பணிபுரிந்த கறுப்பினத்தைச் சேர்ந்த டிம்னிட் கெப்ரு என்ற பெண் திடீரென பதவி விலகினார். ஆனால், அவர் கறுப்பின பெண் ஆராய்ச்சியாளர் என்பதால் கூகுள்நிறுவனம் அவரை பழி வாங்கியது என்று குற்றச்சாட்டு எழுந்தள்ளது.
இதுகுறித்து கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அனுப்பியுள்ள அறிக்கையில், ‘‘கெப்ரு போன்றதிறமையான ஆராய்ச்சியாளர் மகிழ்ச்சியின்றி நிறுவனத்தில் இருந்து வெளியேறியதற்கு முழு பொறுப்பும் நிறுவனத்தைச் சார்ந்ததே. இதுபோன்ற விவகாரங்களை மேலும் சிரத்தையுடன் அணுக கடமைப்பட்டுள்ளோம்’’ என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT