Published : 10 Dec 2020 03:15 AM
Last Updated : 10 Dec 2020 03:15 AM

மனைவியுடன் வாக்குவாதம்: கோபத்தில் 450 கி.மீ. நடந்த கணவர்

இத்தாலியின் கோமோ நகரைச் சேர்ந்த 48 வயதான ஒருவருக்கு, கடந்த வாரம் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் அடைந்த கணவர், மன நிம்மதிக்காக நடக்கத் தொடங்கினார். 450 கி.மீ. தூரம் நடந்த பிறகே அவரது கோபம் தணிந்துள்ளது.

சுவிட்சர்லாந்து எல்லைக்கு அருகில் கோமோ நகர் உள்ளது. அங்கு தொடங்கிய அவரது நடை பயணம், தெற்கே அட்ரியாடிக் கடற்கரையில் உள்ள சிறிய நகரான ஃபான்கோவில் முடிந்துள்ளது. இத்தாலியில் கரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, ஃபான்கோ நகரில் அதிகாலை 2 மணிக்கு போலீஸாரிடம் பிடிபட்டார்.

விசாரணைக்குப் பிறகு அவரது மனைவி வரவழைக்கப்பட்டார். கணவரின் இரவு ஓட்டல் செலவு, ஊரடங்கை மீறியதற்கான அபராதம் என ரூ.35,000 செலுத்திவிட்டு, கணவரை அழைத்துச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x