Published : 27 Nov 2020 07:02 PM
Last Updated : 27 Nov 2020 07:02 PM

வங்கதேசத்தில் கரோனா பாதிப்பு 4,58,711 ஆக அதிகரிப்பு

வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,273 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கதேச சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,273 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 4,58,711 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கதேசத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் சதவீதம் 81.46% ஆக உள்ளது. கரோனா பரவலைத் தடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 90 சதவீதம் பலன் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருந்துவக் குழுவினர்களுக்கு நம்பிக்கை வழங்கியுள்ளது.

அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவும் தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 என்ற கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளன.

லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தலைமையில் கண்டுபிடிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளது. இப்பல்கலைக்கழகம் உருவாக்கிவரும் கோவிஷீல்டு தடுப்பூசி மூன்றாவது கட்டப் பரிசோதனையில் 90% பலன் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x