Published : 15 Nov 2020 08:34 PM
Last Updated : 15 Nov 2020 08:34 PM
ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,434 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் சுகாதாரத் துறை தரப்பில், “ ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,434 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 243 பேருக்கு கடுமையான கரோனா அறிகுறிகள் உள்ளன. ஜப்பானில் இதுவரை 1,17,799 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிகக்ப்பட்டுள்ளது.
டோக்கியாவில்தான் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 200 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டோக்கியோவில் சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.
ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT