Published : 21 Oct 2020 01:08 PM
Last Updated : 21 Oct 2020 01:08 PM
அமெரிக்காவில் கரோனாவினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை தற்போதுள்ள எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 8 மாதங்களில் அமெரிக்காவில் கரோனாவுக்கு 2,26,149 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்க வாய்ப்பு இருக்கும். மேலும், இளம் வயதினர் மத்தியில் மரணம் அதிகரித்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் கூடும்போது தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கலிபோர்னியா, டெக்சாஸ், புளோரிடா ஆகிய மாகாணங்களில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 80 லட்சமாக உள்ளது. 55 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளன. எனவே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்தை ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT