Published : 13 Oct 2020 04:30 PM
Last Updated : 13 Oct 2020 04:30 PM

இத்தாலியில் மீண்டும் கரோனா: கட்டுப்பாடுகள் தீவிரம்

இத்தாலியில் மீண்டும் கரோனா பரவல் தொடர்ந்து வரும் நிலையில், அங்கு இரவு நேர விடுதிகள், சமூக நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே கூறும்போது, “இத்தாலியில் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே இரவு நேர விடுதிகள், சமூக நிகழ்வுகள் மற்றும் பிற விளையாட்டு நிகழ்வுகளில் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேரக் கட்டுப்பாடுகளும், பொதுவெளியில் மக்கள் கூடுவதற்குக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் இவ்வாண்டின் தொடக்கத்தில் கரோனா பரவல் தீவிரமாக இருந்தது. இதனால் அங்கு ஊரடங்கு பரந்த அளவில் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பொருளாதாரம் சரிந்தது. எனவே, இம்முறை நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x