Last Updated : 18 Sep, 2015 11:38 AM

 

Published : 18 Sep 2015 11:38 AM
Last Updated : 18 Sep 2015 11:38 AM

பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது தலிபான்கள் திடீர் தாக்குதல்: 13 தீவிரவாதிகள் உட்பட 33 பேர் பலி

பாகிஸ்தானின் பெஷாவர் பகுதி யில் உள்ள விமானப் படை தளத்தை கைப்பற்ற தலிபான்கள் தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில் விமானப் படை கேப்டன் உட்பட 20 வீரர்கள் பலியாகினர். விமானப் படையின் பதிலடியில் 13 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

விமான தளத்தின் இரண்டு நுழைவுவாயில்களில் ராணுவ உடையில் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் இரு குழுக்களாக பிரிந்து தாக்குதல் நடத்தினர். அங்குள்ள மசூதியில் தொழுகை நடத்தி கொண்டிருந்த வீரர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். ஒட்டுமொத்தமாக விமானப் படை கேப்டன் உட்பட 20 வீரர்கள் உயிரிழந் தனர். 22 பேர் படுகாயம் அடைந் தனர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட வீரர்கள், தீவிரவாதிகளை சுற்றிவளைத்து சுட்டனர். இதில் 13 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். மேலும் சில தீவிரவாதிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே ஹெலிகாப்டர் மூலம் அவ ர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே தாக்குதல் சம்பவம் தொடர்பாக 15 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் கூறிய போது, விமானப் படைத் தளத்தை கைப்பற்றும் நோக்கில் தீவிர வாதிகள் நுழைந்துள்ளனர், அவர் களின் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தன.

இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பவ பகுதிக்கு நேரில் சென்றுள்ள அவர், தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்பார் என்று தெரிகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பரில் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளி மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பள்ளி மாணவ, மாணவியர் உட்பட 150 பேர் உயிரிழந்தனர். கடந்த பிப்ரவரி யில் அங்குள்ள ஷியா முஸ்லிம் மசூதிக்குள் புகுந்து தலிபான்கள் சுட்டதில் 21 பேர் பலியாகினர்.

சில மாத இடைவெளிக்குப் பிறகு பெஷாவர் விமானப் படை தளத்தின் மீது தீவிரவாதிகள் இப்போது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x