Last Updated : 01 Sep, 2015 10:45 AM

 

Published : 01 Sep 2015 10:45 AM
Last Updated : 01 Sep 2015 10:45 AM

காஷ்மீர் பிரச்சினையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாத வரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை இல்லை: பாகிஸ்தான் அறிவிப்பு

காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சி னைகளையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாத வரை, இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முடியாது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறியுள்ளதாவது:

காஷ்மீர் உள்ளிட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறவு தொடர்பான இருநாட்டு பிரச்சி னைகள் அனைத்தும் விவாதத் துக்கு எடுத்துக்கொள்ளப்படாத வரை இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியாது.

இந்தியா விதித்த முன் நிபந்தனைகள் காரணமாகவே கடந்த வாரம் இருநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய எல்லைக் காவல் படைத் தலை வரும், பாகிஸ்தான் ரேஞ்சர்கள் படைத் தலைவரும், அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்தச் சமயத்தில் சர்தாஜ் அஜீஸ் மேற்கண்டவாறு கருத்து கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

தேசிய பாதுகாப்பு ஆலோ சகர்கள் நிலையிலான பேச்சு நடத்துவதற்காக கடந்த வாரம் சர்தாஜ் அஜீஸ், டெல்லிக்கு வந்தார். அப்போது காஷ்மீர் பிரிவினை வாதிகளை அவர் சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்து அவர்களிடம் பேசுவார். அதன் பிறகே அவர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் பேசுவார் என்று பாகிஸ்தான் அறிவித்தது. இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அஜீஸை சந்திக்க காஷ்மீரில் இருந்து டெல்லி வந்த பிரிவினைவாத தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

இதனால் அவர்கள் அஜீஸை சந்திக்க முடியவில்லை. இதை யடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோ சகர்கள் நிலையிலான பேச்சை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்தது. அஜீஸ் எந்த சந்திப் பையும் நடத்தாமல் நாடு திரும்பினார். இதன் பிறகு இந்தியாவுக்கு எதிரான போக்கை பாகிஸ்தான் அதிகப்படுத்தியுள்ளது.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்கி இந்திய எல்லையில் பல உயிர்களை எடுத்துள்ளது. மேலும் இந்தியாவால் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தல் என்று கூறி அது தொடர்பாக ஆலோசனை கூட்டத் தையும் நடத்தியது. இப்போது சர்தாஜ் அஜீஸ் பகிரங்கமாக இந்தியா மீது குற்றம்சாட்டி யுள்ளார்.

முன்னதாக கடந்த மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது பிரதமர் மோடியும், நவாஸ் ஷெரீப்பும் சந்தித்துப் பேசினர். அப்போது இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலை யிலான சந்திப்பை நடத்த முடிவு செய்யப்பட்டது.

முன்பு ஜம்மு காஷ்மீர் பகுதியில் மட்டும் ஊடுருவி தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், சமீபத்தில் பஞ்சாபிலும் தாக்குதல் நடத்தினர். தவிர காஷ்மீரில் சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி இருவர் உயிருடன் பிடிபட்டுள்ளனர். இது தவிர இந்திய சுதந்திர தினம் மற்றும் அதற்கு அடுத்த நாளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x