Published : 01 Sep 2015 10:40 AM
Last Updated : 01 Sep 2015 10:40 AM
ஊழல் விவகாரம் தொடர்பாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் பதவி விலகக் கோரி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
பிரதமர் நஜீப் ரசாக்கின் வங்கிக் கணக்கில் ரூ.4,650 கோடி பணம் போடப்பட்டுள்ளது. வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர் இந்தப் பணத்தை அன்பளிப்பாக அளித்ததாகக் கூறப்படுகிறது. இது ஊழல் பணம் என்று எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக தலைநகர் கோலாலம்பூர் மற்றும் கூச்சிங், கோத்தா கினபாலு ஆகிய முக்கிய நகரங்களில் பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மலேசியாவில் நேற்று தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நஜீப் ரசாக் பேசியபோது, மக்கள் மாற்றத்தை விரும்பினால் வாக்குச்சீட்டு மூலம் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம். ஆனால் சாலையில் இறங்கி போராடுவது ஏற்கத்தக்கது அல்ல.
இந்த நேரத்தில் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும். வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT