Published : 11 Sep 2020 01:46 PM
Last Updated : 11 Sep 2020 01:46 PM

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.8 கோடியை கடந்தது

உலகம் முழுவதும் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.8 கோடியை கடந்துள்ளது

இதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் வெளியிட்ட தகவலில், “ உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,80,47,828 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கை 9,07,000 ஆக உள்ளது. 1.8 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 65 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 45 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அந்நாட்டில் கரோனா வைரஸால் 1, 96,331 பேர் உயிரிழந்துள்ளனர். 2-வது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 129,575 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 76,336 பேர் பலியாகி உள்ளனர். நான்காவது இடத்தில் உள்ள மெக்சிகோவில் 69,649 பேர் பலியாகி உள்ளனர்.

உலகின் பல முன்னணி நாடுகளும் கரோனா தடுப்பூசி தயாரிப்பில் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ரா செனெகா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி வல்லுநர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தது.

கிட்டத்தட்ட அந்தத் தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனை நிலையை எட்டியது. இந்நிலையில் சோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு மிகவும் சீரியஸான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதையடுத்து சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x