Published : 22 Aug 2020 12:02 PM
Last Updated : 22 Aug 2020 12:02 PM

மெக்சிகோவில் கரோனா பலி 60,000-ஐ நெருங்குகிறது

மெக்சிகோவில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 60,000-ஐ நெருங்குகிறது.

இதுகுறித்து மெக்சிகோவின் துணை சுகாதாரத்துறை அமைச்சகர் ஹுயுகோ லோபஸ் கூறும்போது, ''மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 504 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மெக்சிகோவில் கரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 59,610 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 5,928 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் கரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. அந்நாட்டில் கரோனாவில் 1,75,350 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2-வது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 1,13,358 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்றாவது இடத்தில் உள்ள மெக்சிகோவில் 59,610 பேர் பலியாகி உள்ளனர். நான்காவது இடத்தில் உள்ள இந்தியாவில் 55,794 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தென்கொரியா, தாய்லாந்து, வியட்நாம், நியூசிலாந்து ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் 2.2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x