Published : 19 Aug 2020 11:55 AM
Last Updated : 19 Aug 2020 11:55 AM

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை  2,21,24,464 ஆக அதிகரிப்பு

உலகம் முழுவதும் சுமார் 2,21,24,464 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவ பல்கலைகழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கூறும்போது, “உலக முழுவதும் சுமார் 2,21,24,464 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 7,77,081 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 1,41,05,701 குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் மட்டும் கரோனாவுக்கு 54,80,487 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,71,636 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் 33,59,570 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,08,536 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதித்த இளம் வயத்தினர்களிடம் கரோனாவுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத காரணத்தால் அவர்களிடமிருந்து கரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. 20 வயது முதல் 40 வயதுக்குட்பவர்களுக்கு கரோனா பாதித்திருந்தாலும் அவர்களுக்கு அறிகுறிகள் தெரிவதில்லை. இவ்வாறு இருப்பதால் வயதானவர்களும், நோய்வாய்ப்பட்டவர்களும் எளிதாக பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு பல்வேறு நிலையை எட்டியுள்ளன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கேய்சர் போன்ற நிறுவனங்கள்தான் கரோனா தடுப்பு மருந்தின் 3-வது கட்டத்தில் நுழைந்து மனிதர்களுக்கான கிளினிக்கல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த சூழலில் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x