Published : 18 Jul 2020 08:01 PM
Last Updated : 18 Jul 2020 08:01 PM

சவுதியில் கரோனா பலி 2,447 ஆக அதிகரிப்பு

சவுதி அரேபியாவில் கரோனாவுக்கு மேலும் 40 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு கரோனா பலி எண்ணிக்கை 2,447 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சவுதி நோய்த் தடுப்பு மையம் தரப்பில், “சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து சவுதியில் கரோனா பலி எண்ணிக்கை 2,447 ஆக அதிகரித்துள்ளது. மேலும், புதிதாக 2,565 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதில் அதிகபட்சமாக ரியாத்தில் 212 பேரும், ஜெட்டாவில் 189 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சவுதியில் கரோனாவுக்கு இதுவரை 2,48,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் மக்களுக்குத் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல், தேவையின்றி வெளியே வராமல் இருத்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதி அரேபியாவும் கரோனா தொற்றால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன.

உலகம் முழுவதும் 1.4 கோடி பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x