Published : 06 Jul 2020 12:33 PM
Last Updated : 06 Jul 2020 12:33 PM
பாகிஸ்தானில் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக 48 மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை பாகிஸ்தானில் கரோனாவுக்கு 2,31,818 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,762 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் கரோனா பரவல் தீவிரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸிலிருந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று கூறி மருத்துவர்கள் 48 பேர் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.
இதுகுறித்து பிடிஐக்கு மூத்த மருத்துவர் ஒருவர் கூறும்போது, “நாங்கள் கோவிட்-19 வைரஸை எதிர்ப்பதில் முதல் நிலை வீரர்களாக உள்ளோம். ஆனால், மருத்துவர்கள் பாதுகாப்பில் அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை. அரசாங்கம் எங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் அனைத்து விதத்திலும் தவறிவிட்டது. இந்த நிலையில் ராஜினாமா செய்த மருத்துவர்கள் தற்போது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் கரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சூழலில் ஊரடங்கை அமல்படுத்துமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பொருளாதாரத்தைக் காரணம் காட்டி, ஊரடங்கை அமல்படுத்துவதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தவிர்த்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT