Published : 01 Jul 2020 03:33 PM
Last Updated : 01 Jul 2020 03:33 PM
பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2, 13,470 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 4,133 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2, 13,470 ஆக அதிகரித்துள்ளது. 4,395 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.
2,000க்கு அதிகமானவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் கரோனாபாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் 84, 640 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் 76,262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலுசிஸ்தானில் 10,476 பேரும், இஸ்லமாபாத்தில் 12,912 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்தான் கரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தச் சூழலில் ஊரடங்கை அமல்படுத்துமாறு எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பொருளாதாரத்தை காரணம் காட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தவிர்த்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT