Published : 11 Jun 2020 06:55 PM
Last Updated : 11 Jun 2020 06:55 PM

ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா மையமாக உருவாகியுள்ள தென் ஆப்பிரிக்கா: உலக சுகாதார அமைப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா பரவலின் மையமாக தென் ஆப்பிரிக்கா மாறியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, ''ஆப்பிரிக்காவில் கரோனா தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. தென் ஆப்பிரிக்கா கரோனா பரவலின் மையமாக விளங்குகின்றது. அல்ஜீரியா, கேம்ரூன் ஆகிய நாடுகளும் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மக்களிடையே பொது சுகாதார நடவடிக்கைகள் அவசியம் . சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கரோனா தொற்றால் இதுவரை 55,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,210 பேர் பலியாகியுள்ளனர். 26,099 பேர் குணமடைந்துள்ளனர்.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x