Published : 13 May 2020 12:27 PM
Last Updated : 13 May 2020 12:27 PM

பாகிஸ்தானில் கரோனா தொற்று 34,336 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தானில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 34,336 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் டான் தொலைக்காட்சி, “பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 2,225 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,336 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கரோனா தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் 13,255 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிந்து மாகாணத்தில் 5,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலுசிஸ்தானில் 2,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கரோனா தொற்றுக்கு 737 பேர் பலியாகியுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக பிரதமர் இம்ரான் கான் ஆலோசனை நடத்தினார்.

பல்வேறு உலக நாடுகளைப் போல பாகிஸ்தானிலும் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஊரடங்கினால் கடும் பொருளாதார நெருக்கடியையும் பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் தொழில் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தான் கடந்த சனிக்கிழமை தளர்த்தியது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

பாகிஸ்தானில் வரும் ஜூன் மாதத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x