Published : 07 Aug 2015 10:47 AM
Last Updated : 07 Aug 2015 10:47 AM
இலங்கையில் நல்லிணக் கத்தை ஏற்படுத்த அந்த நாட்டுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து ஐ.நா. சபை ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபானி துஜாரிக் கூறியதாவது: இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று அந்த நாட்டின் நல்லிணக்கத்துக்காக தொழில்நுட்பரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உதவிகளை வழங்க ஆலோசித்து வருகிறோம்.
உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு பணிக்காக ஏற்கெனவே ரூ. 6,37,57,950 நிதியுதவி அளிக்கப் பட்டுள்ளது. இலங்கை அரசுடன் ஆலோசித்து அந்த நாட்டுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT