Published : 21 Apr 2020 12:43 PM
Last Updated : 21 Apr 2020 12:43 PM

இத்தாலியில் கரோனா தொற்று குறைகிறது

இத்தாலியில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இதில் ஐரோப்பிய நாடுகளான இத்தாலியும், ஸ்பெயினும் கடுமையான நோய்த் தொற்றால் உயிரிழப்பைச் சந்தித்துள்ளன. இந்த நிலையில் இரு மாதங்களுக்குப் பிறகு இத்தாலியில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இத்தாலி நோய்த் தடுப்பு மையம் கூறும்போது, ''முதல் முறையாக ஆரோக்கியமான முன்னேற்றம் அடைந்துள்ளது. கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது'' என்று தெரிவித்துள்ளது.

இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் 486 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,81,228 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,114 பேர் பலியாகியுள்ளனர். மார்ச் மாதத்தில் தொடங்கிய ஊரடங்கு மே மாதம் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

24,81,528 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6,47,734 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x