Published : 20 Apr 2020 08:52 PM
Last Updated : 20 Apr 2020 08:52 PM

ஆப்கானிஸ்தானில் கரோனா தொற்று 1,026 ஆக அதிகரிப்பு

போதிய மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் இல்லாத நிலையில் ஆப்கானிஸ்தானில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,026 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,026 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இதுவரை கரோனா தொற்றுக்கு 33 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கரோனா தொற்றைப் பரிசோதனை செய்வதற்கான உபகரணங்கள் போதுமான அளவு இல்லாத காரணத்தால் அங்கு பரிசோதனைகள் குறைவான எண்ணிக்கையில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பரிசோதனைக்கு விரைவில் மருத்துவ உபகரணங்கள் வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பரிசோதனைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

24,07,439 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6,25,202 பேர் குணமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x