Last Updated : 24 Aug, 2015 08:29 AM

 

Published : 24 Aug 2015 08:29 AM
Last Updated : 24 Aug 2015 08:29 AM

விசா விதிகளை மீறியதாக இலங்கையில் 4 இந்தியர்கள் கைது

விசா விதிகளை மீறியதாக இலங்கையில் 4 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த நாட்டு போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: நான்கு இந்தியர்களும் சுற்றுலா பயணிகளுக்கான விசாவில் வந்து கல்முனை பகுதியில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டின்பேரில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான வணிகப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x