Published : 07 Aug 2015 10:55 AM
Last Updated : 07 Aug 2015 10:55 AM
பூமியில் இருந்து பார்த்தால் தெரியாத நிலவின் இருண்ட பக்கத்தை, நாசா செயற்கைக்கோள் படம்பிடித்துள்ளது.
நாசாவின் 'டீப் ஸ்பேஸ் க்ளைமேட் அப்சர்வேட்டரி' செயற்கைக்கோள், 10 லட்சம் மைல் தூரத்தில் இருந்துகொண்டு, கடந்த மாதம் நிலவின் இருண்ட பக்கத்தை புகைப்படம் எடுத்துள்ளது.
சூரிய ஒளி வீசும் பூமியின் பக்கமாக நிலவு நகர்ந்தபோது இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாதனையை மேற்கொள்ள, அந்த செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டிருக்கும் 'எர்த் பாலிக்ரோமேடிக் இமேஜிங் கேமரா' முக்கியமான ஆதரவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செயற்கைக்கோள் நிலவைச் சுற்றி வரும் போது ஆண்டுக்கு இரண்டு முறை நிலவு மற்றும் பூமி இரண்டையும் ஒரே சமயத்தில் புகைப்படம் எடுத்து அனுப்பிவைக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT