Published : 22 Aug 2015 10:20 AM
Last Updated : 22 Aug 2015 10:20 AM
இலங்கையின் புதிய அரசு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அரசு மீதான ஊழல் புகார்களை மீண்டும் விசாரிக்கத் தொடங்கி யுள்ளது.
நேற்று முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விமல் வீரவன்ச விடம் நிதி மோசடி குறித்து, பொரு ளாதார குற்றப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் இலங்கை யில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஊழல் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தலில் ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தோல்வி யடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் அந்த விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
முன்னாள் பாதுகாப்புத்துறை செயலராக இருந்த கோத்தபய உட்பட ராஜபக்ச குடும்பத்தினர் பல்வேறு வழக்குகளின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT