Last Updated : 25 Aug, 2015 10:17 AM

 

Published : 25 Aug 2015 10:17 AM
Last Updated : 25 Aug 2015 10:17 AM

மாலத்தீவு முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு

மாலத்தீவுகளின் முன்னாள் அதிபர் முகமது ந‌ஷீத் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முகமது நஷீத் மாலத்தீவு ஜனநாயக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். அந்தத் தீவு நாட்டில் அதிபர் பதவிக்கு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் இவர் ஆவார்.

இவர் 2012ம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவர் ஆட்சியில் இருந்த காலத்தில் பல்வேறு ஊழல்களில் இவர் ஈடுபட்டதாகக் கூறி, இவர் மீது கடுமையான தீவிரவாதத் தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு மார்ச் மாதம் இவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஜூலை மாதம் இவரது தண்டனை குறைக்கப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை இரவு பாதுகாப்புப் படையினர், நஷீத்தை மீண்டும் கைது செய்து சிறைக்குக் கொண்டு சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x