Published : 11 Nov 2019 02:48 PM
Last Updated : 11 Nov 2019 02:48 PM

சிரியாவில் துருக்கி கட்டுப்பாட்டு பகுதியில் கார் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி

சிரியாவின் வடக்கில் துருக்கி கட்டுப்பாட்டுப் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”சிரியாவின் வடகிழக்கில் துருக்கி கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சுலிக் கிராமத்தில் தீவிரவாதிகளால் நடந்தப்பட்ட கார்க் குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாகினர். 20-க்கு அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தத் தாக்குதல் குறித்து துருக்கி ராணுவம் தரப்பில்” பொதுமக்கள் 8 பேர் பலியான இந்தத் தாக்குதலை குர்து படையினர் நடத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சிரிய - துருக்கி எல்லைப் பகுதியில் இரு நாட்டுப் படைகளும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, சிரியாவில் குர்து படைகளுக்கு எதிராக துருக்கி ராணுவத்தின் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்து திரும்பப் பெற்றது. துருக்கியின் தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து குர்து படையினர் பின்வாங்கி உள்ளனர்.

சிரியாவில் கடந்த சில வாரங்களாக நடக்கும் வன்முறை காரணமாக 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

வடக்கு சிரியாவில் தொடர்ந்து நடக்கும் வன்முறைகள் கவலை அளிப்பதாக ஐ.நா. சபை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x