Published : 16 Jul 2019 04:26 PM
Last Updated : 16 Jul 2019 04:26 PM

சிரியாவில் தொடரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்: 9 பேர் பலி

சிரியாவில் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிரிய போர் கண்காணிப்புக் குழு கூறும்போது, “ சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான வடகிழக்கில் உள்ள மாரட் அல் நுமன் நகரில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதில் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்னிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

சிரியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ரஷ்யப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 600 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிரியாவில் அரசுப் படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில் சிரிய அதிபர் பஷார் அல்  அசாத்துக்கு ரஷ்யா உதவி வருகின்றது. இதில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் சண்டையிட்டு வருகின்றது. 

இதில் பெரும்பாலான இடங்களை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ள நிலையில்  மீதமுள்ள இடங்களைக் கைப்பற்ற தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. 

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக ஆயிரக்கணகான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x