Last Updated : 24 May, 2015 12:10 PM

 

Published : 24 May 2015 12:10 PM
Last Updated : 24 May 2015 12:10 PM

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை: நீதிமன்றம் உத்தரவு

இலங்கையில் சமீபத்தில் மாணவி ஒருவரை பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கி யவர்களைக் கைது செய்யக் கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் கைது செய்யப்பட்ட 130 பேரை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 14ம் தேதி யாழ்ப் பாணத்தின் புங்குடுதீவு எனும் பகுதியில் 18 வயது மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் குற்றம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குற்றவாளி களைக் கைது செய்வதிலும், அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள் வதிலும் அரசு மெத்தனம் காட்டி வருவதாகக் கூறி அப்ப‌குதி மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் கலந்துகொண்ட சுமார் 130 பேரை இலங்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த 130 பேரை விடுவிக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் எந்த ஓர் ஆர்ப்பாட்டமும் நடத்துவதற்கு இலங்கை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x