Last Updated : 06 Apr, 2015 10:30 AM

 

Published : 06 Apr 2015 10:30 AM
Last Updated : 06 Apr 2015 10:30 AM

மலேசிய ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி

மலேசியாவில் ஒரு ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியதில் அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக்கின் உதவியாளர் அஸ்லின் அலியாஸ் மற்றும் அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜமாலுதீன் ஜர்ஜிஸ் உட்பட 6 பேர் பலியாயினர்.

நேற்று முன்தினம் மதியம் பஹாங் மாகாணம், குவான்டன் நகரிலிருந்து கோலாலம்பூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர், செமனி நகரில் வெடித்துச் சிதறியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தீயில் கருகிய நிலையில் 6 சடலங்களையும் மீட்டனர். குவான்டன் நகருக்கு அருகே உள்ள பெகன் நகரில் நடைபெற்ற நஜிப் ரசாக் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கோலாலம்பூர் திரும்பியபோது இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பைலட் கேப்டன் கிளிஃபோர்டு ஃபோரினியர், துணை பைலட் ஈதியானா பெய்ஜீரா, தொழிலதிபர் ராபர்ட் டன் மற்றும் ஜமாலுதீன் பாதுகாவலர் ரஸ்கான் செரன் ஆகியோரும் பலியாயினர். ஹெலிகாப்டர் வெடித்ததற்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x