Published : 18 Apr 2015 11:40 AM
Last Updated : 18 Apr 2015 11:40 AM
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் நடத்தப்பட்ட பயங்கர இரட்டை குண்டுவெடிப்பில் சிக்கி குறைந்தது 33 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 100 பேர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் நங்கஹர் மாகாணத்தில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் சுமார் 33 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 100 பேர் படுகாயம் அடைந்தனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அச்சம் நிலவுகிறது.
குண்டுவெடிப்பு தனியார் வங்கிக்கு அருகே நடந்ததாக மாகாண காவல் ஆணையர் ஃபசல் அகமது தெரிவித்தார். தாக்குதலில் சிக்கிய அனைவரும் வங்கிக்கு வந்தவர்கள் அல்லது சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT