Published : 15 Apr 2015 11:37 AM
Last Updated : 15 Apr 2015 11:37 AM

தாய்லாந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் 121 பேர் பலி

தாய்லாந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் 121 பேர் உயிரிழந்தனர். 1281 பேர் காய மடைந்துள்ளனர்.

தாய்லாந்தில் ஏப்ரல் 13 முதல் 15-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சங்கிரான் என்றழைக் கப்படும் இந்த புத்தாண்டு கொண்டாட்டத் தில் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்து கின்றனர்.

தலைநகர் பாங்காக் மற்றும் வடக்குப் பகுதியின் பெரிய நகரான சியாங்மய் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு புத்தாண்டை மிகப் பெரிய விழாவாக நடத்துகின்றனர். இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் அதிகம் நேரிட்டுள்ளன.

போதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த நாடு முழுவதும் 121 பேர் உயிரிழந்துள்ளனர். 1281-க்கும் மேற் பட்டோர் காயமடைந்துள்ளனர். நாட்டின் சில பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் இன்னமும் தொடர்கிறது. அங்கு அசம்பாவி தங்களைத் தடுக்க கூடுதல் போலீஸார் கண் காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சங்கிரான் என்றால் என்ன?

சங்கிரான் என்பது சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்த வார்த்தையாகும். இதற்கு ‘சூரிய ஆண்டு தொடக்கத்தில்’ என்று அர்த்தமாகும். ஆண்டுதோறும் ஏப்ரல் 13 முதல் 15 வரை இவ்விழா கொண்டாடப் படுகிறது. இதையொட்டி தாய்லாந்து மக்கள் வீடுகளை தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்துகின்றனர்.

புத்த மடங்களையும் தூய்மைப்படுத்துகின்றனர். இவை தவிர சாலை, தெருக்களில் திரண்டு ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர். இதன்மூலம் கடந்த ஆண்டு பாவங்கள் கழுவப்படுவதாக அவர்கள் நம்பு கின்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் அதே காலகட்டத்தில் தாய்லாந்திலும் புத்தாண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் பால் குடம் எடுப்பது, காவடி தூக்குவது போன்ற பாணியில்தான் தாய்லாந்திலும் இந்த தண்ணீர் திருவிழா கொண்டாடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x