Last Updated : 16 Apr, 2015 11:23 AM

 

Published : 16 Apr 2015 11:23 AM
Last Updated : 16 Apr 2015 11:23 AM

நேபாள முன்னாள் பிரதமர் சூர்ய பஹதூர் தாப்பா காலமானார்

நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சூர்ய பஹதூர் தாப்பா காலமானார். அவருக்கு வயது 87.

சூர்ய பஹதூர் புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்தார். நோய் முற்றிய நிலையில் கடந்த மார்ச் 29-ல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பல்னின்றி இன்று (வியாழக்கிழமை) காலை அவரது உயிர் பிரிந்தது.

50 ஆண்டுகளாக நேபாள அரசியலில் கோளோச்சிய சூர்ய பஹதூர் தாப்பா 5 முறை நேபாள பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x