Last Updated : 18 Mar, 2015 03:47 PM

 

Published : 18 Mar 2015 03:47 PM
Last Updated : 18 Mar 2015 03:47 PM

மளிகை கடை துப்பாக்கிச் சூடு: அமெரிக்காவில் இருவர் பலி

அமெரிக்காவில் மர்ம நபர்கள் மளிகை கடைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் பலியாகினர்.

அமெரிக்க மாகாணமான கலிஃபோர்னியாவில் உள்ள பலசரக்கு மளிகை கடையில் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.

மேலும் இந்தச் சம்பவத்தில் பலர் காயமடைந்ததாகவும் ஸ்டாக்டான் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ பகுதியில் ஏற்பட்ட தொடர் துப்பாக்கிச் சூடு சத்ததால் பதற்றமடைந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x