Last Updated : 07 Feb, 2015 04:05 PM

 

Published : 07 Feb 2015 04:05 PM
Last Updated : 07 Feb 2015 04:05 PM

இராக்கில் இரட்டை குண்டுவெடிப்புக்கு 23 பேர் பலி; 50 பேர் காயம்

இராக் தலைநகர் பாக்தாத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 23 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராக் தலைநகர் பாக்தாத்தின் கிழக்குப் பகுதியில் முதல் குண்டு வெடித்தது. இதனை அடுத்து ஷர்க்கா மார்க்கெட் என்ற பகுதியிலும் அடுத்த குண்டுவெடித்தது. இந்த இரு சம்பவத்திலும் 23 பேர் உயிரிழந்ததாகவும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராக்கில் பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சற்றே பாதுக்காப்பு பின்வாங்கப்பட்ட நிலையில், மிண்டும் ஷியாப் பிரிவு மக்கள் வாழும் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x