Published : 21 Jan 2015 09:33 AM
Last Updated : 21 Jan 2015 09:33 AM

போதைப் பொருள் கடத்திய 8 பேருக்கு வியட்நாமில் தூக்கு

வியட்நாமில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

189 கிலோ ஹெராயின் போதைபொருளை கடத்தியதாக ஹோ பின் பகுதி போலீஸார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இரண்டு வாரங்கள் நடை பெற்ற இந்த விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் 2 பேர் பெண்கள் ஆவார்.

போதைபொருள் கடத்தல் தொடர்பான மற்றொரு வழக்கில் 17 பேருக்கு 6 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2014-ம் ஆண்டில் மட்டும் போதைபொருள் கடத்தில் வழக்கில் 29 பேருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x