Published : 18 Dec 2014 03:27 PM
Last Updated : 18 Dec 2014 03:27 PM
2008-ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தலைவர் ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
2008-ம் ஆண்டு மும்பையில் பல்வேறு இடங்களில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக் குதலை பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் நடத்தியிருந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் செயல்பாட்டுத் தலைவரான ஜகியுர் ரஹ்மான் லக்வி, அப்துல் வாஜித், மஸார் இக்பால், ஹமாத் அமின் சாதிக், ஷாகித் ஜமீல் ரியாஸ் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜகியுர் ரஹ்மான் லக்வி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. லக்வி சார்பில் வழக்கறிஞர் ரிஸ்வான் அப்பாஸி ஆஜரானார்.
லக்விக்கு ஜாமீன் வழங்க மத்திய புலனாய்வு அமைப்பின் வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித் தார். ஆனால், அதை கருத்தில் கொள்ளாத நீதிமன்றம், லக்விக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்தியா ஆலோசனை
லக்விக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சட்டபூர்வமான நடவடிக் கையில் ஈடுபடுவது தொடர்பாக இந்தியா ஆலோசனை நடத்தி வருகிறது. இஸ்லாமாபாதில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், லக்விக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT