Last Updated : 19 Aug, 2017 03:01 PM

 

Published : 19 Aug 2017 03:01 PM
Last Updated : 19 Aug 2017 03:01 PM

ரஷ்யாவில் கத்தியால் தாக்கிய மர்ம நபரை சுட்டுக் கொன்ற போலீஸ்

ரஷ்யாவில் பொதுமக்கள் மீது திடீரென கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் உள்ள சுர்குட் நகரில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது திடீரென ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தினர். இந்தத் திடீர் தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர். இவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திலிருந்த அந்த நபரை சுட்டுக் கொன்றனர். இந்த திடீர் தாக்குதலில் பின்னணி குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x